காலகாலமாக “சோற்று முழுக்கு” (அன்னாபிஷேகம்) என்றிருந்த விழா கடந்த 25+ ஆண்டுகளாக “சோற்று ஒப்பனை”-ஆக (அன்ன அலங்காரம்) மாறிவிட்டது!
சோற்று முழுக்கின் பொருள்: மொத்த உலகமும் உணவுமயம்!!
இந்த ஒப்பனையைக் கண்டால் மேலுலகம் கிட்டும் (சோறு கண்ட இடம் சொர்க்கம்) என்று எழுதுகிறார்கள். இது தவறு. இதை கண்டால் – அதாவது, மொத்த உலகமும் உணவுமயம் என்பதை உணர்ந்தால் – நமது ஆணவமடங்கும்!!
எனில், சோறு கண்ட இடம் சொர்க்கம் என்ற சொற்றொடரின் உண்மையான பொருளென்ன?
🔹 சோறு என்ற தமிழ் சொல்லுக்கு விடுதலை (ஆரியத்தில், முத்தி) என்றொரு பொருளுண்டு. நம்மை பற்றிய சரியான அறிவைப் பெறுதலே விடுதலையாகும்.
🔹 கண்ட – காணுதல் – உணர்தல்.
🔹 இடம் – நிலை
🔹 சொர்க்கம் – மேலுலகம் – தேவைகளற்ற கவலைகளற்ற மகிழ்ச்சியான நிலை.
நம்மை அழியும் உடலெனத் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். நாம் அழிவற்ற பரம்பொருள் என்பதை உணர்ந்து, அந்த மெய்யறிவில் நிலைபெறுதலே சொர்க்கமாகும்.
oOOo
மேலும் விரிவாக தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கீழ்காணும் இணையப் பக்கங்களைக் காணவும்:
1. சோற்று முழுக்கு: http://samicheenan.blogspot.com/2018/10/blog-post_23.html?m=1
2. சோற்று முழுக்கு & சோறு கண்ட இடம் சொர்க்கம்: http://samicheenan.blogspot.com/2020/11/blog-post.html?m=1
oOOo
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்!!
கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽♂️
திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽♂️
🌸🌼🌻🏵️💮
சோற்று முழுக்கு / ஒப்பனை & சோறு கண்ட இடம் சொர்க்கம்
Leave a reply