Monthly Archives: August 2022

அண்மையில், மலேசியாவில் குடமுழுக்கு கண்ட திரு பச்சையம்மன்!

ஒரு கணக்கில், திரு பச்சையம்மன் இயற்கையைக் குறிக்கிறார். இன்னொரு கணக்கில், எல்லாப் பற்றுகளும் நீங்கி, உடல்-உலக காட்சிகளும் நீங்கிய பின்னர், மீதமிருக்கும் “நான் நானே” என்ற அறிவைக் குறிக்கிறார்.

இந்த அறிவு உள்ளபொருளிலிருந்து வேறானதல்ல என்கிறார் பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️. வெள்ளை நிற பெருமானும், பச்சை நிற அன்னையும் அமர்ந்திருக்கும் உருவகத்திலுள்ள பெருமான் உள்ளபொருளையும் (நான் / இருப்பு), அன்னை உள்ளபொருளைப் பற்றிய அறிவையும் (இருக்கிறேன்) குறிக்கிறார்.

பெருமான் + அன்னை
வெள்ளை (ஒளி) + பச்சை
இருப்பு + அறிவு / உணர்வு
நான் + இருக்கிறேன்

இவ்விரண்டும் வேறு வேறல்ல. அல்லது, இவ்விரண்டையும் பிரிக்கவியலாது. இந்த இருப்புணர்வே மெய்யறிவு எனப்படும். இவ்வுணர்வில் நிலைத்து நிற்பதே விடுதலையெனப்படும். நாம் இருக்கிறோமா என்பதில் நமக்கு ஐயமில்லை. இதையுணர இன்னொருவர் உதவியும் தேவையில்லை. இவ்வகையில், நாம் அனைவரும் பச்சையம்மன்களே!

oOo

திரு பச்சையம்மன் திருவுருவில் 3 கருவிகளைக் காணலாம். அம்மனை தனியொரு நபராக, வேறெங்கோ இருப்பவராக காணும் போது:

🌷 திரிசூலம் – கனவு, நனவு & தூக்கம் ஆகிய 3 நிலைகளிலிருந்து நம்மை விடுவிப்பவர்
🌷 பாசம் – உடல்-உலக சிறைக்குள் நம்மை தள்ளுபவர்
🌷 அங்குசம் – உடல்-உலக சிறையிலிருந்து நம்மை மீட்பவர்.

அம்மனை “நான் நானே” என்ற நிலையிலிருப்பவராக காணும் போது:

🌷 திரிசூலம் – கனவு, நனவு & தூக்கம் ஆகிய 3 நிலைகளையும் கடந்தவர். மற்றும், மெய்யறிவு உடையவர்.
🌷 பாசம் – மெய்யறிவாளர் விரும்பினால், உடல்-உலக சிறைக்குள் மீண்டும் சிக்கிக் கொள்ளவும் முடியும்
🌷 அங்குசம் – அவர் முயற்சித்தால், உடல்-உலக சிறையிலிருந்து மீளவும் முடியும்

பாசம் & அங்குசத்தை பிள்ளையாரிடமும் காணமுடியும். அங்கும் இதே பொருளில் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

அண்மையில், மலேசியாவில் குடமுழுக்கு கண்ட திரு பச்சையம்மன்!

ஒரு கணக்கில், திரு பச்சையம்மன் இயற்கையைக் குறிக்கிறார். இன்னொரு கணக்கில், எல்லாப் பற்றுகளும் நீங்கி, உடல்-உலக காட்சிகளும் நீங்கிய பின்னர், மீதமிருக்கும் “நான் நானே” என்ற அறிவைக் குறிக்கிறார்.

இந்த அறிவு உள்ளபொருளிலிருந்து வேறானதல்ல என்கிறார் பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️. வெள்ளை நிற பெருமானும், பச்சை நிற அன்னையும் அமர்ந்திருக்கும் உருவகத்திலுள்ள பெருமான் உள்ளபொருளையும் (நான் / இருப்பு), அன்னை உள்ளபொருளைப் பற்றிய அறிவையும் (இருக்கிறேன்) குறிக்கிறார்.

பெருமான் + அன்னை
வெள்ளை (ஒளி) + பச்சை
இருப்பு + அறிவு / உணர்வு
நான் + இருக்கிறேன்

இவ்விரண்டும் வேறு வேறல்ல. அல்லது, இவ்விரண்டையும் பிரிக்கவியலாது. இந்த இருப்புணர்வே மெய்யறிவு எனப்படும். இவ்வுணர்வில் நிலைத்து நிற்பதே விடுதலையெனப்படும். நாம் இருக்கிறோமா என்பதில் நமக்கு ஐயமில்லை. இதையுணர இன்னொருவர் உதவியும் தேவையில்லை. இவ்வகையில், நாம் அனைவரும் பச்சையம்மன்களே!

oOo

திரு பச்சையம்மன் திருவுருவில் 3 கருவிகளைக் காணலாம். அம்மனை தனியொரு நபராக, வேறெங்கோ இருப்பவராக காணும் போது:

🌷 திரிசூலம் – கனவு, நனவு & தூக்கம் ஆகிய 3 நிலைகளிலிருந்து நம்மை விடுவிப்பவர்
🌷 பாசம் – உடல்-உலக சிறைக்குள் நம்மை தள்ளுபவர்
🌷 அங்குசம் – உடல்-உலக சிறையிலிருந்து நம்மை மீட்பவர்.

அம்மனை “நான் நானே” என்ற நிலையிலிருப்பவராக காணும் போது:

🌷 திரிசூலம் – கனவு, நனவு & தூக்கம் ஆகிய 3 நிலைகளையும் கடந்தவர். மற்றும், மெய்யறிவு உடையவர்.
🌷 பாசம் – மெய்யறிவாளர் விரும்பினால், உடல்-உலக சிறைக்குள் மீண்டும் சிக்கிக் கொள்ளவும் முடியும்
🌷 அங்குசம் – அவர் முயற்சித்தால், உடல்-உலக சிறையிலிருந்து மீளவும் முடியும்

பாசம் & அங்குசத்தை பிள்ளையாரிடமும் காணமுடியும். அங்கும் இதே பொருளில் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

கடகம் – விளக்கு: திரு சுந்தரமூர்த்தி நாயனார், திரு சேரமான் பெருமாள் நாயனார் & திரு ஒளவையார் திருநாள்

கடகம் (ஆடி) – விளக்கு (சுவாதி)

திரு சுந்தரமூர்த்தி நாயனார், திரு சேரமான் பெருமாள் நாயனார் & திரு ஒளவையார் திருநாள்

🌷 தம்பிரான் தோழராகிய திரு சுந்தரமூர்த்தி நாயனாரைப் பற்றி எழுதுவதற்கு ஓர் இடுகை போதாது. ஒரு நூலே எழுதவேண்டும். அவ்வளவு செய்திகள் உள்ளடங்கியது அவரது வரலாறு!

🌷 விநாயகர் அகவல் பாடிய திரு ஒளவைப் பாட்டியின் பெயர் அறம் என்ற சொல் உள்ளவரை நிலைத்திருக்கும்! “எந்த நூல் அழிந்தாலும் தமிழன்னைக்கு குறையில்லை. ஆனால், பாட்டியின் நூல்கள் அழிந்தால் அது பெருங்குறையே!” என்ற மகாகவிஞரின் புகழுரை போதும் பாட்டியின் சிறப்பையும், அன்னைத் தமிழுக்கு அவரது பங்களிப்பையும் உணர!

🌷 திரு சேரமான் பெருமாள் நாயனார் பற்றி சற்று பார்ப்போம்:

🔸 சுந்திரமூர்த்தி நாயனாரின் சம காலத்தவர் (8ஆம் நூற்றாண்டு) மற்றும் அவரது சிறந்த நண்பர்

🔸 மகோதை எனும் கேரளாவை ஆண்டவர் (பேரரசர் இராஜேந்திர சோழரின் மகனான பேரரசர் இராஜாதிராஜ சோழர் சோழப்பேரரசின் மேற்கு எல்லையாக மகோதையைக் குறிப்பிடுகிறார்)

🔸 தில்லை கூத்தப் பெருமானின் சலங்கை ஒலியைக் கேட்கும் பேறு பெற்றிருந்தார்

🔸 ஓரறிவு முதல் ஆறறிவு பெற்ற உயிரிகள் வரை அனைவரின் குறைகளை அறியும் திறன் பெற்றிருந்தார்

🔸 பெரும் கொடை வள்ளல்

🔸 கழறிற்றறிவார் என்பது சிறப்பு பெயர்

🌷 அது என்ன கழறிற்றறிவார்?

கழல் இற்று அறிவார். இறைவனது திருப்பாதம் (கழல்) இத்தகையது (இற்று) என்று தெள்ளத்தெளிவாக அறிந்தவர் (அறிவார்). அதாவது, என்றுமே அழியாத, மாறாத, தன்னொளி பொருந்திய, இடைவிடாது இருக்கின்ற, மாசற்ற தனது தன்மையுணர்வைப் (திருப்பாதம் – கழல்) தெளிவாக அறிந்தவர். சுருக்கமாக, தன்மையுணர்வில் இருப்பவர் – மெய்யறிவு பெற்றவர்!!

🌷 நாயனார்களின் இறுதிக்காலம்:

மரபுவழிச் செய்தி:

திருவஞ்சைக்களம் திருக்கோவிலிலிருந்து சுந்திரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை மீதேறி கயிலாயம் சென்றார். இதையறிந்த சேரமான் பெருமாள் நாயனார் வெள்ளைக் குதிரை மீதேறி கயிலாயம் சென்றார். இந்நிகழ்வுகளை உணர்ந்த ஒளவையார், தான் செய்துகொண்டிருந்த பிள்ளையார் வழிபாட்டை விரைவாக்கினார். அதைக்கண்ட பிள்ளையார், அவரை தடுத்து நிறுத்தி, வழிபாட்டை செவ்வனே முடிக்க அறிவுருத்தினார். வழிபாட்டிற்குப் பின்னர், நாயன்மார்களுக்கு முன்னதாக, பாட்டியை தாமே திருக்கயிலாயத்திற்கு கொண்டுசேர்ப்பதாக உறுதியளித்தார். வழிபாட்டிற்குப் பின்னர் அவ்வாறே கொண்டுசேர்த்தார்.

இதன் பொருள்:

🔸 நாயன்மார்கள் இருவரும் திருவஞ்சைக்களம் திருத்தலத்தில் திருநீற்று நிலையடைந்துள்ளனர்

🔸 தம்பிரான் தோழர் அறிவைக் கொண்டும் (வெள்ளை யானை – மூளை), கழறிற்றறிவார் யோக வழியிலும் (குதிரை – மூச்சுக்காற்று) நிலைபேறு அடைந்துள்ளனர்

🔸 ஒளவைப் பாட்டியைப் பற்றிய உருவகம்:

– ஒருவர் வாழும் வாழ்க்கையே வழிபாட்டிற்கு சமம்

– ஒளவையார் அறிவைப் போற்றி, சந்தித்தோரின் அறிவுப்பசி நீக்கி வாழ்ந்தவர்

– சிவ குடும்பத்திலுள்ள பிள்ளையார் அறிவைக் குறிப்பவர்

– எனில், அறிவைப் போற்றிய அவரது வாழ்க்கை = பிள்ளையார் (அறிவு) வழிபாடு (வாழ்க்கை)!!

– “வழிபாட்டை செவ்வனே செய்” என்பது அன்றாட வாழ்வை சரியாக வாழ்வது; கடமைகளை சரிவர செய்வது என்பதாகும்.

– “வழிபாட்டிற்குப் பின்னர் பாட்டியை பிள்ளையார் கயிலாயத்திற்கு கொண்டுசேர்த்தது” என்பது செவ்வனே வாழ்ந்து முடித்த பிறகு, உடல் உலக காட்சிகள் நீங்கி, தன்மையுணர்வில் (கயிலாயத்தில்) நிலைபெறுவதாகும் (கொண்டுசேர்த்தது)

– “நாயன்மார்களுக்கு முன்னதாக கயிலாயம் சேர்ந்தது” – நாயன்மார்கள் இருவரும் சற்றேனும் முயற்சி செய்து நிலைபேற்றினை அடைந்துள்ளனர். பாட்டியோ, எந்த வகை முயற்சியுமின்றி அடைந்துள்ளார். நாயன்மார்களின் முயற்சி 1 மணித்துளியெனில், பாட்டியின் முயற்சி 0 மணித்துளியாகும்.

“முன்னதாக” என்பதற்கு “நாயன்மார்கள் கயிலாயம் சென்றுசேர்வதற்கு முன்னர்” என்று தவறாக பொருள் கொள்வதற்கு அடிப்படை “கயிலாயம் என்ற இடம் எங்கோ இமயத்தில் / வானத்தில் இருப்பதாக” கருதும் அறியாமையாகும்!

நமது தன்மையுணர்வே திருக்கயிலாயம்.

இதை உணர்வதே மெய்யறிவு.

இவ்வறிவில் நிலைபெறுவதே விடுதலை.

oOOo

சிவாய நம என்று சிந்தித்திருந்த அம்மை அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கார் கொண்ட கொடைக் கழறிற்றறிவார்க்கும் அடியேன் 🌺🙏🏽🙇🏽‍♂️

வாழி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகெலாம் 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 100% வேலைகளையும் பறித்துக்கொண்ட குஜ்ஜூக்கள்!! 😡🤬

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 100% வேலைகளையும் பறித்துக்கொண்ட குஜ்ஜூக்கள்!! 😡🤬

“படிப்பது ராமாயணம்! இடிப்பது பெருமாள் கோயில்!!” என்பது போல, ஒரு பக்கம், தன்னை “நாடோடி மன்னன்”, “இதயக்கனி” என்று அடுத்த எம்ஜிஆராக படங்காட்டிக்கொண்டு, இன்னொரு பக்கம், “ஏழேழு தலைமுறைக்கும் வில்லன்டா” என்று நம்பியார் வேலை செய்துகொண்டிருக்கிறார்!! 😡

பிறப்பால் மலையாளியானாலும், உணர்வால் தமிழனாக வாழ்ந்த எம்ஜிஆர் எங்கே? பிறப்பால் குஜ்ஜுவானாலும், உணர்வால் கோரி-கிளைவ் வகையறாக்களையும், மாமாப்பயலையும் மிஞ்சும் இவர் எங்கே?

ஆரியப்பூசாரிகள் விரும்பமாட்டார்கள், “கைங்கரியம்” செய்வார்கள் என்று தெரிந்தும், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்ட, உலகின் முதல் அறிவியல் நூல் என்று கருதப்படும் “ஐந்திரம்” என்ற பழமையான தமிழ் நூலை, திருவிழா போன்றோரு பெருவிழா நடத்தி வெளியிட்டார் எம்ஜிஆர். ஆனால், இவரோ, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்த தமிழ் இருக்கைகளின் எண்ணிக்கையை 51-லிருந்து 2-ஆக குறைத்துள்ளார்!! (காலையில் எழுந்ததும், ஜிலேபியை தயிருடன் உண்ணும் 🤮-பயல்களின் 2,000+ ஆண்டுகால வயிற்றெரிச்சலின் விளைவா? அல்லது, யாரேனும் பிரார்த்தன பண்ணிண்டாளா? அந்த பகவானுக்குத்தான் வெளிச்சம்!)

பெரு முதலாளிகளுக்காக, பெரு நிறுவனங்களுக்காக மட்டும் ஆட்சி செய்யாமல், மக்களையும் நேசித்து, அவர்களுக்காகவும் ஆட்சி செய்தால் போதும். மக்கள் இவரை தங்களது உயிரினும் மேலாக கருதுவார்கள்; தலையிலும் தோள்களிலும் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். மக்கள் திலகமாக ஆக மக்களின் திலகமாக விளங்கினால் போதும். மக்கள் திலகத்தின் பாடலை ஒலிக்கவிட்டு, படங்காட்டத் தேவையில்லை.