Monthly Archives: February 2023

நம் தமிழ்நாட்டில் எதற்கு கோழிக்கிறுக்கல்?

ஐஆர்சிடிசி செயலியை பயன்படுத்திவிட்டு, வெளியேறும் முன், இணைக்கப்பட்டுள்ள விளம்பரம் வந்தது. நம் தமிழ்நாட்டில் எதற்கு கோழிக்கிறுக்கல்? வடமொழிகளை எதிர்ப்பதாக படங்காட்டும் திராவிடியாள் கூட்டம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமா?

குறிமதத்து நிறுவனங்கள் எனில் பச்சை நிறம், ஆண்குறி திறப்பு (பிறைநிலா), பெண்ணுறுப்பு (கலவி நிலைய நுழைவாயில்), ஆணுறுப்பு (மினார்) என்பதோடு இப்போது கோழிக்கிறுக்கலும் சேர்ந்துள்ளது.

பெரும்பாலான குறிமதத்து நிறுவனங்கள் தங்களது மத அடையாளங்களை மறைக்கும்; அல்லது, அடக்கி வாசிக்கும். இப்போது வெளிப்படையாக காட்டிக்கொள்ள தொடங்கியுள்ளனர்.

🏢 ஹிமாலயா – மென்மையான பச்சை நிறத்தை மட்டும் பயன்படுத்துவார்கள். மற்றபடி, இதொரு குறிமத நிறுவனம் என்பது பொதுமக்களுக்கு தெரியாது.

🏢 ID (தோசைமாவு, சப்பாத்தி, பரோட்டா…) – ID என்ற எழுத்துகளை ஆண்குறி திறப்பு (பிறைநிலா) போன்று வடிவமைத்திருப்பார்கள். அடர் பச்சை பயன்படுத்தியிருப்பார்கள். சற்று சிந்தித்தால், இதொரு குறிமத நிறுவனம் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

🏢 iDrive – அடர் பச்சை நிறம், ஆண்குறி திறப்பு போன்று வடிவமைக்கப்பட்ட iD எழுத்துகள், மற்றும், கோழிக்கிறுக்கல். “இதொரு குறிமத நிறுவனம்” என்று பறையறிவிக்காத குறைமட்டுமே!

ஒரு வகையில், இப்படி பறையறிவிப்பது போன்று நடந்துகொள்வது நல்லது. நாம் முடிவெடுக்க வசதியாகவிருக்கும்.

oOo

பல உருவங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டே, “உருவ வழிபாட்டை அறவே எதிர்ப்பவர்கள் நாங்கள்” என்று பீற்றிக்கொள்வார்கள் குறிமதத்தவர்கள். அதிலும், ஆண்குறி திறப்பு (பிறைநிலா), கருநிற கனசதுரம் எனில் அவ்வளவுதான்! உருகிவிடுவார்கள்.

பிறைநிலா என்ற உருவத்தை கண்டதும் அவர்களுக்கு ஆண்குறி திறப்பு நினைவுக்கு வரவேண்டும். ஆண்குறி திறப்பு என்றதும் உடலுறவின் இறுதியில் நடக்கும் விந்து வெளியேற்றம் நினைவுக்கு வரவேண்டும். விந்து வெளியேற்றம் என்றதும் அச்சமயம் ஆண்மகன் ஓரிரு நொடிகளுக்கு உடலுணர்வு இழப்பது நினைவுக்கு வரவேண்டும். அந்த துய்ப்பை (ஆரியத்தில் “அனுபவத்தை”) நினைவில் நிறுத்தவேண்டும்! 😮

புறமுகமாக செல்லும் கண்ணோக்கத்தை அகமுகமாக நம் மீது (தன்மையுணர்வின் மீது) திருப்பிக்கொண்டு, அப்படியே இருக்கவேண்டும். அவ்வளவுதான்! இதற்கு எதற்கு பலானதை நினைக்க வேண்டும்? மூக்கை தொடவேண்டுமெனில், நேராக மூக்கில் கையை வைக்கவேண்டும். ஏன் எங்கெங்கோ சுற்றி, மூக்கை தொடவேண்டும்?

🌷 தன்னை உபாதிவிட்டு ஓர்வதுதான் ஈசன்

தன்னை உணர்வதாம் உந்தீபற

தானாய் ஒளிர்வதால் உந்தீபற

இந்த ஒரு பாடலில் நாம் என்ன செய்யவேண்டும், ஏன் செய்யவேண்டும் என இரு கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டார் பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️.

🌷 தூஉய்மை என்பது அவாவின்மை

மூன்றே சொற்களில் இறைநிலை என்பது எது, அதையடைய என்ன செய்யவேண்டும் என இரு கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டார் திரு முப்பால் முனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️.

நம் மெய்யியலாளர்கள் அனைவரும் இப்படிப்பட்டவர்களே! 💪🏽

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

கொழுக்கட்டையும் ஹைத்தலக்கடியும்!! 😀

உங்க மதம் மட்டுமில்ல, பாய். உலகத்துல இருக்கிற, இருந்த எல்லா மதங்களுக்கும் தாய்மண் பாரதம்தான். எல்லாத்துக்குமான விதைங்க இங்கிருந்துதான் போச்சு. என்ன, சில விதைங்க, போற வழியில கெட்டுப் போச்சு; சில விதைங்க போய் சேர்ந்த எடத்தினால கெட்டுப் போச்சு. உங்க எடத்தில அசல் காட்டுமிராண்டிங்க வாழ்ந்தாங்க. அவுகளுக்கேத்த மாதிரி பலான ஐயிட்டங்கள சேத்துக் கொடுத்திட்டாரு உங்க ஆளு. ஒரு கத சொல்றேன்; கேளுங்க, பாய்.

oOo

அவன் ஒரு சரியான மூடன். புதிதாக திருமணமானவன். ஏதோ ஒரு வேலைக்காக ஓர் ஊருக்கு செல்ல வேண்டியிருந்தது. அந்த ஊருக்கு அருகில்தான் அவனது மாமியார் வீடு இருந்தது. வேலையை முடித்துவிட்டு, தனது பெற்றோரையும் பார்த்துவிட்டு வரும்படி அவனது மனைவி கேட்டுக்கொண்டதால், அவனும் மாமியார் வீட்டிற்கு சென்றான்.

புது மாப்பிள்ளை என்பதால் தடபுடலாக வரவேற்று, பல வகையான சிற்றுண்டிகளை பரிமாறினர். அவற்றில் கொழுக்கட்டை இவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அது பற்றி மாமியாரிடம் கேட்டான். அவரும் அது பற்றி விளக்கிவிட்டு, உடன், தனது மகள் மிக நன்றாக கொழுக்கட்டை செய்வாள் என்பதையும் கூறினார். பின்னர், அங்கிருந்து வீடு திரும்பும்போது, “கொழுக்கட்டை” என்ற பெயர் மறவாதிருக்க, அதை சொல்லிக்கொண்டே வந்தான்.

இடையில் ஒரு சிறு கால்வாய் வந்தது. அதிலொரு பாம்பும் இருந்தது. இவனை தாண்டவிடாமல் சீறியது. இவன் சற்று சிந்தித்துவிட்டு, பின்னே வந்து, வேகமாக ஓடி, “ஹைத்தலக்கடி” என்று சொல்லிக்கொண்டே குதித்து, கால்வாயை தாண்டினான். பாம்பிடமிருந்து தப்பினான். தப்பித்த மகிழ்ச்சியில் “ஹைத்தலக்கடி” என்று திரும்ப திரும்ப கூவிக்கூத்தாடினான். கூத்தாடியதில் “கொழுக்கட்டை” என்ற பெயரை மறந்துபோனான். “ஹைத்தலக்கடி” என்று சொல்லிக்கொண்டே ஊர் போய் சேர்ந்தான்.

வீடு வந்து சேர்ந்ததும், முதல் வேலையாக, தனது மனைவியிடம் “ஹைத்தலக்கடி” சமைத்து தரச்சொன்னான். அவள், அது பற்றி தனக்கு தெரியாது என்றும், அப்படியொரு உணவை சமைத்ததேயில்லை என்றும் சொன்னாள். இவனுக்கு கோபம் பொத்துக்கொண்டுவந்தது. மனைவி தன்னிடம் பொய் சொல்கிறாள் என்று கருதி, அவளை நையப் புடைத்தான்.

மனைவியின் கூக்குரல் கேட்ட அக்கம்பக்கத்தினர், ஓடி வந்து, அவனிடமிருந்து மனைவியை காப்பாற்றிவிட்டு, நடந்ததை கேட்டனர். அவனும் சொன்னான். ஒருவருக்கும் ஹைத்தலக்கடி பற்றி தெரியவில்லை. இதற்குள் மனைவியின் தலை, முகமெல்லாம் வீங்கிப்போனது. அதை பார்த்த ஒருவர், “வேற ஏதாச்சும் சமைச்சு தரச் சொல்லவேண்டியதுதானே. இப்பிடி அடிச்சு, கொழுக்கட்ட மாதிரி வீங்க வெச்சுட்டியே!” என்றார். அதைக்கேட்ட அந்த மூடன், “ஆங்! கொழுக்கட்ட! கொழுக்கட்ட!!” என்று மகிழ்ச்சி பொங்க சொல்லிவிட்டு, நடந்ததைக் கூறினான்.

இப்போது, அவனது மனைவிக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் எப்படியிருந்திருக்கும்? 😛

கதையின் நீதி: மூடனிடம் செய்தி சொல்லாதே!

oOo

இது மாதிரிதான், பாய், பாலைவன மதங்களோட கதை. இங்கிருந்து போன கொழுக்கட்டைங்க, ஹைத்தலக்கடிகளா மாறிப்போச்சு. ஒன்னு என்னடான்னா, “ஹைத்தலக்கடி நல்லது. சுவைத்துப் பாருங்கள்.”-ன்னு சொல்லுது. நீங்க என்னடான்னா, “ஹைத்தலக்கடி மிகப் பெரிது”-ன்னு சொல்றீங்க. ஆனா, ரெண்டுபேருமே ஹைத்தலக்கடி பாரதத்துலதான் தோன்றிச்சுன்னு அடம்புடிக்கிறீங்க. கொழுக்கட்டய கண்டுபுடிச்சு, எல்லாரும் சாப்டுட்டு நல்லா இருக்கட்டுமேன்னு நெனச்ச எங்களுக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்.

வரலாறு தரும் பாடம்: காட்டுமிராண்டிகளையும், மறை கழன்றவர்களையும் பண்படுத்த முயற்சிக்காதே!

தொடக்கமுடையது முடிவடைந்தே தீரும்.
தோன்றியது மறைந்தே தீரும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

அன்னை அகிலாண்டேசுவரி, திருவானைக்கா 🌺🙏🏽🙇🏽‍♂️

ஒரு சைவ திருக்கோயிலுக்கு வெளியே, இறைவனும் இறைவியும் இரு வேறு பொருட்களை குறிப்பர். ஆனால், ஒரு திருக்கோயிலுக்குள்ளே இருவரும் ஒருவரையே குறிப்பர். வெவ்வேறு வகையாக குறிப்பர்.

திருவானைக்கா என்ற பழம்பெரும் திருக்கோயில் திரு ஜம்பு மாமுனிவரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ திருவிடமாகும். திரு ஜம்புலிங்கேசுவரர் என்ற உடையவரின் கீழே திருநீற்று நிலையிலிருக்கும் அம்மாமுனிவரையே அன்னையும் குறிப்பிடுகிறார். அதாவது, அன்னையை வணங்கினாலும் ஜம்பு மாமுனிவரை வணங்கியது போலாகும். இதை புரிந்துகொள்வதற்கு மிக எளியதொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

நடிகர் திலகத்தின் மீது பேராவல் கொண்ட அன்பரொருவர், அவரது கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்திலிருந்து ஒரு படத்தை தன் வீட்டில் வைத்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். சிவாஜியை பற்றி அறிந்திராத வெளி மாநில / நாட்டு நபரொருவர் அப்படத்தை காண நேர்ந்து, அது பற்றி அவரிடம் கேட்டால் அவர் என்ன சொல்வார்?

“இதுதான் நடிகர் திலகம்” என்று சொன்னால் அது “ஜம்புலிங்கேசுவரர்” என்று சொல்வதற்கு சமம்.

“கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் நடித்த நடிகர் திலகம்” என்று சொன்னால் அது “அன்னை அகிலாண்டேசுவரி” என்று சொல்வதற்கு சமம்.

🌷 ஜம்புலிங்கேசுவரர் – எல்லையற்ற, மாசற்ற, மாறுபாடற்ற, செயலற்ற உள்ளபொருள்

🌷 அன்னை அகிலாண்டேசுவரி – தன்னை அண்டியவரை காத்து (அன்னையின் வலது கை) அருளும் (இடது கை), அன்பே வடிவான (வலதுகையின் மேலுள்ள கிளி) ஜம்பு மாமுனிவர்.

(கிளி என்ற சொல்லுக்கு இன்பம் என்று பொருள் கொள்வதைவிட, அன்பு என்று பொருள் கொள்வதே இங்கு பொருத்தமாகவிருக்கும். “அன்பே சிவம்” என்பது திருமூலர் வாக்காகும். 🌺🙏🏽🙇🏽‍♂️)

நமது திருக்கோயில்களை பின்வருமாறு குறிப்பிடுவர்: அருள்மிகு + அன்னையின் பெயர் + உடனுறை / உடனாய + இறைவனின் பெயர் + திருக்கோயில்

இதை சற்று மாற்றினால்,

> அன்னை + உடனுறை / உடனாய + இறைவன்

> தனித்தன்மை + உடனுறை + பொதுத்தன்மை

ஜம்பு என்ற தனித்தன்மை உடனுறையும் உள்ளபொருள்

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

திருநெறிய தமிழிலுள்ள திரு கலந்த சில வசைமொழிகள்!!

– கேடு கெட்டவன்

– பொளப்பத்தவன்

– போக்கத்தவன்

– கண்டவன்

– கூறு கெட்டவன்

– வெறிச்சுப் பாக்குறான்

இன்று இச்சொற்றொடர்கள் வசைமொழியாக பயன்படுத்தப்படுகின்றன. அதுவும் எதிர்மறையான பொருளில்! ஆனால், உண்மையில், இவை நேர்மறையானவை; ஆழமான பொருள் பொதிந்தவை. சற்று பார்ப்போம்.

🔸 கேடு கெட்டவன்

கேடு எனில் குறை, தீங்கு, அழிவு என பல பொருட்களுண்டு. இவற்றோடு “கெட்டவன்” என்ற சொல்லை சேர்ப்போம்:

குறை + கெட்டவன் = குறையில்லாதவன்

தீங்கு + கெட்டவன் = தீங்கில்லாதவன்

அழிவு + கெட்டவன் = அழிவில்லாதவன்

குறையில்லாத, தீங்கில்லாத, அழிவில்லாதவர்கள் யார்? பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்ற மெய்யறிவாளர்கள்!!

🔸 பொளப்பத்தவன்

பொளப்பு -> பொழப்பு -> பிழைப்பு

பிழைப்பு + அற்றவன்

கடல்நீர் ஆவியானபிறகு மீதமிருப்பது உப்பு. வாயில் போட்டால் உவர்க்கும். உவர்’ப்பு.

லட்டு சாப்பிட்டு முடிந்தவுடன் வாயில் மீதமிருப்பது? இனிமையான சுவை. இனி’ப்பு.

“பிழைப்பு அற்றவன்” எனில் வேலையில்லாதவன். வேலை என்ற சொல்லின் உண்மையான பொருள் அசைவு. மனதை அசையவிடுவது. சிறுவயது முதல் ஓடி, ஆடி, விளையாடி, மெக்காலே கல்வி கற்று, பொருள் தேடி, திருமணம் செய்து, பிள்ளைகள் பெற்று, அவர்களை வளர்த்து, குடும்ப, சமூக, நாட்டுக் கடமைகளை சரிவர செய்துமுடித்து இறக்கும்போது அல்லது இறந்த பிறகு புரியும் மொத்தமும் தவறென்பது! 😀 தவறு -> பிழை. எஞ்சுவது, பிழை. பிழை’ப்பு.

1. பிழைப்பு + அற்றவன் எனில் பிழையில்லாதவன்.

2. பிழைப்பு + அற்றவன் -> வேலையில்லாதவன். மனதை அசையவிடும் தேவையற்றவன்.

யார் பிழையில்லாதவரும், மனதை அசையவிடும் தேவையற்றவரும் ஆவார்கள்? பகவான் போன்ற மெய்யறிவாளர்கள்!!

🔸 போக்கத்தவன்

போக்கத்தவன் -> போக்கு + அற்றவன்

வழிப்போக்கன் = வழியில் செல்பவன்

போக்கு = செல்வது / போவது

போக்கு + அற்றவன் -> போகும் தேவையற்றவன் -> வையகத்தினுள் போகும் தேவையற்றவன் -> வையகத்தினுள் மனதை செலுத்தும் தேவையற்றவன்.

யாருக்கு வையகத்தினுள் மனதை செலுத்தும் தேவையில்லை? வேறு யாருக்கு? பகவான் போன்ற மெய்யறிவாளர்களுக்கு!!

🔸 கண்டவன்

“அன்பே வா” திரைப்படத்தில், ஓரிடத்தில், “இங்க யாரெல்லாம் தங்கியிருக்காங்க?” என்று எம்ஜிஆர் கேட்க, “கண்டவனெல்லாம் தங்கியிருக்கான்; உன்னையும் சேத்து.” என்று நாகேஷ் பதில் கூறுவார். “கண்டவன்” என்ற சொல்லுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இவ்வளவுதான்!

கண்டவன் -> கண்டு முடித்தவன் / கண்டுகொண்டவன்

எதை கண்டுகொண்டவன்?

தானே உள்ளபொருள் என்ற தனதுண்மையை, வையகமென்பது வெறும் காட்சிமட்டுமே என்ற பேருண்மையை கண்டுகொண்டவன்.

எங்கே கண்டுகொள்ளமுடியும்?

திருநீற்று நிலையில் (ஆரியத்தில், சமாதி). திருக்கயிலாயக் காட்சியில் (“கண்கூடாகக் காணுதல்”).

யாரெல்லாம் திருநீற்று நிலைக்கு சென்றவர்கள்? யாரெல்லாம் திருக்கயிலாயக் காட்சியைக் கண்டவர்கள்?

பகவான் போன்ற மெய்யறிவாளர்கள்!!

🔸 கூறு கெட்டவன்

கூறு என்ற சொல்லுக்கு பகுதி, பிரிவு, பங்கு, தன்மை, பாலின உறுப்பு என பல பொருட்களுண்டு. இங்கு ‘பிரிவு’ என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

‘கெட்டவன்’ என்ற சொல் மேலே “கேடு கெட்டவனில்” பார்த்தது போன்று ‘இல்லாதவன்’ என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, பிரிவு இல்லாதவன். அல்லது, பிரிவை உணராதவன்.

நம்மை நாம் காணும் வையகத்திலிருந்து வேறாக உணர்கிறோம். வையகத்திற்குள் நாமிருப்பதாக உணர்கிறோம். மெய்யறிவாளர்கள் அப்படி உணர்வதில்லை. அவர்களுக்குள் வையகமிருப்பதாக உணர்கிறார்கள். தமக்குள்ளிருப்பதை தம்மிலிருந்து வேறாக எவ்வாறு காணமுடியும்?

எனவே, தாம் வேறு, வையகம் வேறு என்ற பிரிவு இல்லாதவர்கள். அதாவது, கூறு கெட்டவர்கள்!

🔸 வெறிச்சுப் பாக்குறான்

“அந்த கொள்ளிக்கண்ண[ன்] வெறிச்சுப் பாக்குறதப் பாரு” போன்ற சொற்றொடர்களை கேள்விப்பட்டிருப்போம். இங்கு “வெறிச்சு” என்பது “உற்று” என்ற பொருளிலும், “கொள்ளிக்கண்ண[ன்]” என்பது “அழுக்காறு உடையவன்” என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை தவறாகும்.

கொள்ளிக்கண்ணன் -> பார்வையாலேயே சுட்டெரிப்பவன்

எதை சுட்டெரிப்பவன்?

தன்னை அண்டியோரின் அறியாமையை சுட்டெரிப்பவன்.

இதற்கு சமமான ஆரியச் சொற்றொடர்: நயன தீக்கை.

வெறிச்சு -> வெறிது -> ஒன்றுமில்லாமை

ஒன்றுமில்லாமல் எப்படி பார்க்கமுடியும்? அல்லது, ஒன்றுமில்லாமையை எவ்வாறு பார்க்கமுடியும்?

சில சமயம், கண்களை திறந்தபடியே திருநீற்று நிலைக்குப் போய்விடுவார் பகவான். கண்கள் திறந்திருக்கும். ஆனால், காணுதல் எனும் தொழில் நடக்காது. அவர் திருநீற்று நிலையிலிருப்பார். அங்கு அவரை தவிர வேறொன்றுமிருக்காது. இதுவே, ஒன்றுமில்லாமையைக் காண்பதாகும். வெறிச்சுப் பார்த்தலாகும்.

oOo

ஆக, மேற்கண்ட அனைத்து சொற்றொடர்களும் மெய்யறிவாளர்களைக் குறிக்கும் ஆழ்ந்த பொருள் பொதிந்த, மேன்மையான சொற்றொடர்களாகும். எப்போது இவை வசைமொழியாக மாறியிருக்கும்?

எளிய பதில்: பொருளாதார சிந்தனை மேலோங்கிய பின்னர்.

நீண்ட பதில்: தொடர்ந்த மத & அரசியல் படையெடுப்புகள், அந்நிய இனங்களின் ஊடுறுவல், இனப்பெருக்கம், வெள்ளையர் விதைத்த பஞ்சம், இயற்கை பேரிடர்கள், பல நூற்றாண்டுகளாக தமிழரல்லாதவரின் ஆட்சி, கடந்த 60 ஆண்டுகளாக “ஊருக்குள் சேர்க்கவேக்கூடாது” என்ற வகையறாக்களின் கையில் ஆட்சி & ஏவல்… இந்த மேலான சூழ்நிலையில், மெய்யியல் சிந்தனை எங்கே மிஞ்சும்!

தற்போது நிலவும் பொருளாதார சூழல் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இறக்கும் தருவாயிலும்கூட ஒருவர் தனது பொருளாதாரத்தின் மீது ஒரு கண் வைத்திருக்கவேண்டிய சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். இந்நிலையில், பொருள் தேடவேண்டிய ஒருவர் வடக்கிருத்தல், மெய்யறிவு, வீடுபேறு என்று கிடந்தால்… 😏

oOo

🔸 ஆள் அரவமின்றி

இறுதியாக, “ஆள் அரவமின்றி” என்ற சொற்றொடரை பார்ப்போம்.

ஓரிடத்தில் ஒருவருமில்லாமல், எவ்வகையான ஓசையுமில்லாமல் இருந்தால், அவ்விடம் ஆள் அரவமின்றி காணப்படுகிறதென்று சொல்வோம். ஆள் என்பது எதனை குறிக்கிறதென்று கேட்டால், “மனிதன்” என்று பதில் சொல்லுவோம். சரி, அதென்ன அரவம் (பாம்பு)? பூனை, நாய், மாடு என எத்தனையோ பழக்கப்பட்ட உயிரிகள் இருக்கையில், ஏன் அரவமென்றார்கள்?

அரவமெனில் ஓயாமல் நமக்குள் எண்ணங்களைத் தோற்றுவிக்கும் மனமாகும்! மனதை பாம்பு, அன்னை (மாயை), மாயோன் (மாயக்கண்ணன்) என்று பல வகையாக உருவகப்படுத்தியுள்ளனர். சிவபெருமானின் உச்சந்தலையில் குடிகொண்டிருக்கும் கங்கையன்னையும் மனதையே குறிப்பிடுகிறார். ஓயாமல் அவரிடமிருந்து வெளிப்படும் நீரானது, ஓயாமல் நமக்குள் தோன்றும் எண்ணங்களைக் குறிக்கும். எவ்வளவு மோசமான எண்ணமாகவிருந்தாலும், இறுதி விளைவு நல்லதாகத்தான் இருக்கும் என்ற கணக்கில், அந்நீரை மேன்மையான நீராக (புனிதநீர் – கங்கை) காண்பித்துள்ளனர்.

அடுத்து, ஆள்.

ஆள் எனில் மனிதனல்ல. “நான் இன்னார்” என்ற எண்ணமாகும்! இந்த எண்ணமே நமக்கு தனித்தன்மையைக் கொடுக்கிறது.

“நான் இன்னார்” (ஆள்) & மனம் (அரவம்) ஆகிய இரண்டும் எந்த நிலையில் காணாமல் போகின்றன? திருநீற்று நிலையில் (ஆரியத்தில், சமாதி)!!

(தூக்கத்திலும் இவ்விரண்டும் இருப்பதில்லை. ஆனால், இவை இல்லையென்பதை நாம் உணருவதில்லை. திருநீற்று நிலையில் தெளிவாக உணருவோம்.)

எனவே, ஆள் அரவமின்றி = திருநீற்று நிலை.

இவ்வாறு, ஓரிடத்தைப் பற்றி விளக்குவதற்கும், ஒருவரை திட்டுவதற்கும்கூட மெய்யியலை பயன்படுத்திய குடி, வையகத்தில் தமிழ் குடியாகத்தான் இருக்கமுடியும். மேலும், மேற்கண்ட சொற்றொடர்கள் யாவும் கற்றவர் மட்டுமே பயன்படுத்தியவையல்ல. இன்னும் சொல்லப்போனால், சில சொற்றொடர்கள் பாமரர்கள், எளியவர்கள் மட்டுமே பயன்படுத்தியவையாகும். அவ்வளவு தூரம் மெய்யியல் தமிழோடும், தமிழர்களோடும் கலந்திருந்துள்ளது. இன்னும் ஆராய்ந்தால், மெய்யியலே அன்னைத்தமிழின் உயிர்நாடியென்பது தெளிவாக விளங்கும். இவ்வளவு பண்படுவதற்கு எத்தனை ஆயிரம், இலட்சம் ஆண்டுகளாயிற்றோ!

சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே! 💪🏽

oOOo

என்றுமுள தென்தமிழ் வாழ்க 🌷🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸