பொருள் புரியாமல் இறைபெயர்களை  உருட்டுவதால் எந்த பயனுமில்லை!!

எனக்குத் தெரிந்த நபரொருவர், பின்வரும் அசுரச்செய்யுளை, நேரம் கிடைக்கும் போதெல்லாம் உருட்டிக் கொண்டிருப்பார்: 

ஓம் நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி 

தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

அவருக்கு நான் கொடுத்த விளக்கங்களின் ஒரு பகுதியை இச்சிறு இடுகையாக மாற்றியுள்ளேன்.

oOo

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொன்னால்தான் பயனளிக்கும் என்பது திரு மணிவாசகப் பெருமானின் வாக்காகும்.

🌷 நாராயணன் -> நீராய் இருப்பவன். நீர் -> பாற்கடல் -> மாறிக்கொண்டேயிருப்பது -> நமதுடல். நமதுடலாக இருப்பவன்.

🌷 வாசுதேவன் -> வசுதேவனின் மகன். வசு – ஒளி, நெருப்பு போன்ற 8 பொருட்களை குறிக்கும். அதாவது, நாம் காணும் யாவுமானவன்.

🌷 விஷ்ணு – எங்கும் நிறைந்திருப்பவன். காட்சிகள் தோன்றாத பகுதியென்று வையகத்தில் ஏதேனுமுள்ளதா? இல்லையல்லவா? எனவே, எங்கும் நிறைந்திருப்பவன்.

நாம் இவ்வுடல் என்பது பொய்யறிவு. நாம் இவ்வுடலல்ல என்பது மெய்யறிவு. இந்த மெய்யறிவை விடாது இறுகப் பற்றுவது நிலைபேறு (அசுரத்தில், சமாதி)இந்நிலையை அடையும்போது, மேற்கண்ட யாவும் பொய்த்துப் போகும். காட்சிகள் தோன்றாது. தோன்றினாலும் நம்மை பாதிக்காது. மாற்றம் என்பது இருக்காது. அதாவது, நாராயணனாகவும், வாசுதேவனாகவும் & விஷ்ணுவாகவும் இருக்கும் மாயைக்கு அங்கு வேலையிருக்காது.

✨ காண்பான் – சிவம் – நாம்.

✨ காணப்படுவது – அன்னை / பெருமாள் – நம்மை தவிர மீதமனைத்தும்.

நம்மை நாமுணர, நாம் செய்ய வேண்டியதெல்லாம்: சும்மா இருத்தலே!!

oOo

இராமன் என்பவன் தன்னை இராமனென்று உணர கண்ணாடி வேண்டுமோ?

— பகவான் திரு இரமண மாமுனிவர்

இந்த “நெத்தியடி” அறிவுரையை கேட்டவுடன் அவரது மனம் அமைதியடைந்தது! 😌

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Leave a comment