அயோத்தியின் பட்டை நாமங்கள்!!


\|/ இராமனுக்கு பருத்தியாடை

தெலுங்கர் இராமானுஜர், 8-9 நூற்றாண்டுகளுக்கு முன்னர், “மார்கழி திங்கள் குளிரிலிருந்து திருவரங்கம் பெருமாளை காக்க வெந்நீரால் குளிப்பாட்டுவோம்; கம்பளியாடை போர்த்துவோம்” என்று தொழிலை தொடங்கிவைத்தார். இன்றுவரை அந்த நுட்பத்தின் (டெக்னிக்) “மவுசு” குறையவில்லை! 😏 அதன் தொடர்ச்சிதான், “இராமனுக்கு வெயில் நேரத்தில் பருத்தியாடை அணிவித்தல்” என்பது.

மண்சிலைக்கு (திருவரங்கம் பெருமாள்) குளிருமா? கற்சிலைக்குதான் (அயோத்தி இராமன்) வியர்க்குமா?

திருவரங்கமாவது உயிர்ப்புள்ள திருக்கோயில். பெருமாள் சிலைக்கு கீழே, திரு சட்டைமுனி சித்தர் திருநீற்று நிலையிலுள்ளார். அயோத்தியிலிருப்பது உயிரற்ற கோயில். அங்கு எப்பெருமானும் திருவிடம் (அசுரத்தில், சமாதி) கொள்ளவில்லை. அப்படியே ஒரு பெருமான் திருவிடம் கொண்டிருந்தாலும், மேலே வைக்கப்பட்டிருக்கும் அடையாளச் சிலைக்கு செய்யும் எதுவும், கீழேயுள்ள பெருமானை பாதிக்காது.

பருவத்திற்கேற்ற ஆடையணிவிப்பது என்பது மக்களை கவர்ந்திழுப்பதற்கான ஒரு விற்பனை நுட்பம் மட்டுமேயாகும். அதை காண்பதால் அன்பர்களுக்கு ஒரு மெய்யியல் (அசுரத்தில், ஆன்மிகம்) பயனும் கிட்டாது.

\|/ இராமன் மீது படும் பகலவனின் ஒளி

அன்று, பகலவனின் நகர்வைக் கணக்கிட்டு, அதற்கேற்றவாறு கட்டடங்களை கட்டி, ஒரு குறிப்பிட்ட நாளில் / குறிப்பிட்ட வேளையில் பகலவனின் ஒளி இறைவடிவத்தின் மீது படும்படி செய்தார்கள். இன்று, கண்ணாடி & ஆடிகளை (லென்ஸ்) பயன்படுத்தி, குழாய்கள் வழியாக ஒளியை, தேவையான இடத்திற்கு கொண்டுவருகிறார்கள். எது கடினமான தொழிற்நுட்பம்? எதற்கு அதிக மூளைத்திறன் வேண்டும்? எது பெரிதும் போற்றப்பட வேண்டும்?

மேலும், பகலவனின் ஒளி இறைவடிவத்தின் மீது பட்டாலென்ன? படாவிட்டாலென்ன? இதற்கும் மெய்யியலுக்கும் என்ன தொடர்புள்ளது? 

\|/ இராமனுக்கு 1 மணி நேரம் ஓய்வு

அசுரர்கள் ஒரு கற்சிலைக்கு உயிரூட்டினார்கள் என்பது ஒரு மடங்கு நகைச்சுவை எனில், பல ஆண்டுகள் வாழ்ந்த ஒருவருடைய 5 வயது ஆதனை (அசுரத்தில், ஆன்மா) பிடித்து, அக்கற்சிலைக்குள் செலுத்தியுள்ளனர் என்பது பல மடங்கு நகைச்சுவையாகும்!! 😄 பராமரிப்பு பணிகளுக்காக இவர்களுக்கு ஒரு மணி நேரம் தேவைப்படலாம். அதை இராமனின் தலையில் சுமத்திவிட்டார்கள்.

பகவான் திரு இரமண மாமுனிவரின் உடல் இறக்கும் போது அதற்கு 70 வயது. பகவான் நிலைபேற்றினை அடைந்தவர். இன்றும் அங்கேயே இருப்புவர். இனியும் அங்கேயே இருப்பார். அன்பர்களின் வேண்டுகோள்களுக்கு செவிசாய்க்கும் அண்ணலான அவரது அருளைப் பெறும் நல்வினைப்பயன் நமக்கிருந்து, இன்று அவரை வேண்டினோம் என்றால், 144 ஆண்டுகள் முதிர்ச்சி கண்ட ஆதனாக வந்து ஆட்கொள்வார். 5 வயது ஆதனாக மீண்டும் வரமுடியாது.

இதே கணக்கு இராமனுக்கும் பொருந்தும் – அவரும் நிலைபேற்றினை அடைந்தவராக இருந்தால்!

oOOo

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Leave a comment