கம்பர் பெருமானுக்கும் குறிமதத்திற்கும் என்ன தொடர்பிருக்கிறது?

மற்றெல்லா போட்டிகளுக்கும் வயது வரம்பு உண்டாம். குறிமத போட்டிக்கு மட்டும் கிடையாதாம்! 😏

ஒப்பாரி மதம், ஈன வெங்காய மதம், அம்மண மதம், மொட்டை மதம் என எல்லாம் எங்கே போயின? ஊடகங்களை, திரை & விளம்பரத் துறைகளை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது போல, பேச்சுப் போட்டிகளையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் குறிமதத்தினர் கொண்டுவந்துவிட்டனரா?

இப்படியொரு நிகழ்ச்சியை நடத்தவேண்டிய தலையெழுத்து திரு கம்பவாரிதி ஐயாவுக்கு! 😒

oOo

கம்பர் பெருமானை 🌺🙏🏽🙇🏽‍♂️ இராமனின் கதைக்காக நாம் அறிந்திருக்கக்கூடாது. அவரது தென்தமிழுக்காக அறிந்திருக்கவேண்டும். பொய்பிளை அன்னைத்தமிழுக்கு மாற்றிக்கொடுத்த திரு ஆறுமுக நாவலரை எவ்வாறு அறிந்திருக்கிறோம்? பொய்பிளுக்காகவா? என்றுமுள தமிழுக்காக! தென்னாடுடைய கடவுளின் சமயத்திற்காக!! இவ்வாறே, அசுரர்களின் ஒரு பிரிவினர் கேட்டுக்கொண்டனர் என்பதற்காக, வான்மீகி இராமாயணத்தை திருநெறியத் தமிழுக்கு மாற்றிக்கொடுத்த கம்பர் பெருமானை, இராமாயணத்தோடு இணைத்து அறியக்கூடாது. அவரது தீந்தமிழுக்காக அறிந்திருக்கவேண்டும்.

பெண்குறி (நாமம்) மதத்தின் கொள்கைகளில் அவருக்கு உடன்பாடு இருந்திருந்தால், அவற்றை கடைப்பிடித்திருந்தால், நாட்டரசன்கோட்டையில் உள்ள அவரது திருவிடத்தை (அசுரத்தில், சமாதியை), ஓர் இராமனின் வடிவமல்லவா அணி செய்து கொண்டிருக்கவேண்டும்? தென்னாடுடையவனின் சின்னமல்லவா (அசுரத்தில், சிவலிங்கம்) அணி செய்துகொண்டிருக்கிறது!!

oOo

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்

நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகு இலா விளையாட்டு உடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

— கடவுள் வாழ்த்து, கம்பராமாயணம்

இன்னாருக்குப் பிறந்து, இன்னாரை மணமுடித்து, இன்னாரை கொன்று, இன்ன நாட்டினை ஆண்டு, மடிந்த ஒருவரை கம்பர் பெருமான் வணங்கவில்லை. தனக்குவமை இல்லாத உள்ளபொருளையே வணங்குகிறார்.

oOo

ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

— திருக்குறள் #588

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Leave a comment